Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
பதுளை, மடுல்சீமை, மெட்காதன்னையிலுள்ள பெண்கள் இருவரைத் தாக்கிப் படுகாயங்களுக்கு உள்ளாக்கிய இளைஞனைத் தேடும் பணியில் மடுல்சீமை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
மடுல்சீமை, மெட்காதன்னை என்ற இடத்தைச் சேந்த 29 வயதான ஸ்ரீயாணி தேவிகா என்ற பெண்ணையும், 45 வயதான எ.எம்.சந்திராவதி என்ற பெண்ணையும் பொல்லால் தாக்கியுள்ளதோடு, கத்தியால் குத்தி படுகாயமடையச் செய்துள்ளான்.
குறித்த இரு பெண்களும் படுகாயங்களுக்குள்ளான நிலையில் பதுளை வைத்தியசாலையின் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (25) மெட்டிகாதன்னை என்ற பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லையென்றும் தாக்குதலை மேற்கொண்ட 17 வயது நிரம்பிய இளைஞன், பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியிருப்பதால் அவ்விளைஞனை கைது செய்யமுடியவில்லை என்றும் சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
படுகாயங்களுக்குள்ளான ஸ்ரீயாணி தேவிகா என்ற பெண்ணை கொலை செய்ய முயற்சித்த போது, அதனைக் கண்ட மற்றுமொரு பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளான். எனினும், அவனது கொலை முயற்சி தோல்வியுற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago