2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

மரக்கிளையில் நசுங்குண்டு நபர் பலி

Editorial   / 2018 ஜனவரி 16 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

வெட்டிய மரக்கிளையில் நசுங்குண்டு, ஹப்புத்தளை, நீட்வூட் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த எம்.சசிக்குமார் (வயது 38) என்பவர் திங்கட்கிழமை (15) உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நபர், மரமொன்றின் கிளையை வெட்டி அகற்ற முற்பட்ட வேளையில், வெட்டப்பட்ட மரக்கிளையுடன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக, ஹப்புத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் ஹப்புத்தளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X