Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Kogilavani / 2015 செப்டெம்பர் 06 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
'மலையக மக்கள் இனியும் கூலியாக வாழமுடியாது. இந்த நாட்டில் வடக்கு தமிழ் மக்கள், கிழக்கு வாழ் முஸ்லிம்கள், தெற்கு வாழ் பௌத்த மக்கள் போன்று மலையக மக்களும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். அதற்காகவே மலையகத் தமிழ் முற்போக்கு கூட்டணியை அமைத்தோம். இதனை உருவாக்கி 3 மாதங்களுக்குள் நாம், இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளோம். மலையக மக்களை ஒரே கூரையின் கீழ் கொண்டுவருவோம்' என தேசிய கலந்துரையாடல்கள் பற்றிய அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கொழும்பு ஜிந்துப்பிட்டி சினி சினிமா மண்டபத்தில் கொழும்பு வாழ் மலையக இளைஞர்கள் ஏற்பாடு செய்த பாராட்டு வைபவம் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'கடந்த இரு தசாப்தங்களாக கதிரைகளை சூடாக்கிக் கொண்டிருந்தார்கள். மலையக மக்களது சகல பிரச்சினைகளும் நாடாமன்றத்திலும் சர்வதேசத்திலும் இனி உரைக்கப்போகின்றது. எமது மக்களின் பிரச்சினைகளை போராடிப் பெறல் வேண்டும். எமது மக்களின் நலனுக்காக தனியான மலையக பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும். லயன் வீட்டுத்திட்டத்தை ஒழித்து அனைவருக்கும் சொந்தமாக வீடு காணி பெறப்படல் வேண்டும். கல்வியில் மறுமலர்ச்;சி பெற்று நாம் முன்னேற வேண்டும்.
நுவரெலியாவிலும் அம்பேத்தலை நகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் 4 இலட்சம் மலைய மக்கள் வாழ்கின்றனர். ஆனால், இரண்டே இரண்டு நகரசபை. ஆனால் கிழக்கு, வடக்கில் 15ஆயிரம் மக்களுக்க ஒரு பிரதேச சபை இருக்கின்றது.
நுவரெலியாவிலும் அம்பேத்தலையிலும் 15 பிரதேச சபை உருவாக்கப் போகின்றோம். அதில் இருந்தும் மலையக இளைஞர்கள் நமது பிரதேச சபையில் இருந்து அரசியல் தலைவர்களாக உருவாக வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago