Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Sudharshini / 2015 செப்டெம்பர் 06 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
விகிதாசாரத் தேர்தல் முறைமைக் காரணமாகவே இம்முறை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு போதிய ஆசனங்களை பெற முடியாது போனதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
உடதும்பறைத் தொகுதி மக்கள், சனிக்கிழமை(5) ஒழுங்கு செய்திருந்த வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'பொதுத் தேர்தலானது, தொகுதிவாரி ரீதியில் நடைபெற்றிருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமோக வெற்றி பெற்றிருக்கும். கண்டி மாவட்டத்தில் 13 தேர்தல் தொகுதிகள் காணப்படுகின்றன. அவற்றில் 12 தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்ற போதும் உடதும்பறைத் தொகுதியில் மட்டுமே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐ.ம.சு.கூட்டமைப்பு வெற்றி பெற்றது.
அதுமட்டுமல்லாது கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடும்போது நாட்டில் அநேக தொகுதிகளில் எமது கட்சிக்கான வாக்குத் தொகை குறைந்தபோதும் உடதும்பறைத் தொகுதியில் அதிகளவான வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சுமார் இரண்டாயிரம் வாக்குகள் அளவில் அதிகரிப்புக் காணப்பட்டுள்ளது. எனவே, அமைப்பாளர் என்ற வகையில் உடதும்பறை மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்' என்றார்.
'நாட்டில் மொத்தமாக 160 தேர்தல் தொகுதிகள் காணப்படுகின்றன. அதில் 22 தொகுதிகள் வடக்கு, கிழக்கில் காணப்படுகின்றன. மேற்படி தொகுதிகளில் 18 தொகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது. மீதமுள்ள 147 தொகுதிகளில் 87 தொகுதிகளில் ஐ.ம.சு.கூட்டமைப்பே வெற்றிபெற்றது. எனவே தொகுதிவாரித் தேர்தல் நடந்திருந்தால் நாமே வெற்றி பெற்றிருப்போம்' என்றார்.
'ஆனால் விருப்பு வாக்கு, விகிதாசார முறைமை காரணமாக எம்மால் குறிப்பிட்ட அடைவு மட்டத்தை எய்த முடியவில்லை. கொழும்பு போன்ற மாவட்டங்களில் ஐ.தே.க. அதிகளவு விகிதாசாரத்தில் ஆசனங்களை பெற்றுகொண்டுள்ளது. எமக்கு அப்படியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
தற்போது ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக உள்ளார். எனவே, நாம் அவரது தலைமையில் எதிர்காலத்தில் தேர்தல் வெற்றிக்காகப் பாடுபடவேண்டும். அடுத்து பிரதேச சபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, அதில் எமது பிரிவுக்கு ஒரு அங்கத்தவரை நாம் தெரிவு செய்துக்கொள்ள வேண்டும்' என்றும் கூறினார்.
'அம்முறையின்படி வெளியார் இங்கு வந்து வாக்குக் கேட்கப்போவதில்லை. எமது ஊரைச் சேர்ந்தவர்களே களத்தில் நிற்பர். எனவே, எம்மில் ஒருவரை நாம் தெரிவுசெய்வது மட்டுமல்லாது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வெற்றியடைய செய்யும் முயற்சியில் இறங்க வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago