2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஹட்டன் பொஸ்கோ கல்­லூ­ரிக்கான நிதியை ’தோட்­டப்பாதை அபி­வி­ருத்­திக்கு பயன்படுத்த நடவடிக்கை’’

Kogilavani   / 2017 ஒக்டோபர் 05 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்­லூ­ரி­க்கு, புதிய கட்­­டடம் ஒன்றை அமைக்கும் பொருட்டு, வருட
ஆரம்­பத்தில் ஒதுக்­கப்­பட்ட 70இலட்சம் ரூபாய் நிதி, இதுவரை பயன்­ப­டுத்­தப்­ப­டாது உள்ளதால், அந்தநிதியை
பெருந்­தோட்டப் பாதை அபி­வி­ருத்தி நிதியில் இணைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரி­வித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்,

“பொஸ்கோ கல்­லூரி மட்­டு­மல்ல நுவ­ரெ­லியா மாவட்­டத்திலுள்ள ஏனைய பாட­சா­­லை­களின் அபிவிருத்திக்காக, நான் ஒதுக்கும் நிதியை, பயன்­ப­டுத்தவிடாது மத்­திய மாகாண சபை­யா­னது பல்வேறுத் தடை­களை ஏற்­ப­டுத்தி
வரு­கி­றது. அதில் ஹட்டன் பொஸ்கோ கல்­லூரி பிரதான இடம் வகிக்கிறது.

“இவ்­வ­ருடம் மார்ச் மாதம் ஆரம்­பிக்­கப்­பட்ட பணி­களை தொடரவிடாது பல தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறன. இது குறித்து, ஹட்டன் வாழ் மக்­க­ளும் கல்­லூ­ரியின் பழைய மாண­வர்கள் மற்றும் பெற்­றோரும், சம்பந்தப்பட்டவர்களிடம், ஏன் கேள்வி எழுப்பத் தயங்­கு­கி­றார்கள் என்­பது எனக்கு புரி­ய­வில்லை.

“கல்­லூ­ரிக் காணியில் கட்­டடம் ஒன்றை அமைப்பதற்கு ஒருபுறம் கத்­தோ­லிக்க ஆல­யத்தின் பங்குத் தந்தை
தடை­யாக உள்ளார். மறு­புறம் அர­சியல்வாதிகள் தடை­களை ஏற்­ப­டுத்­து­கின்­றனர். ஒன்று அபி­வி­ருத்­தியை செய்ய வேண்டும் அல்­லது செய்­ப­வர்­களை செய்யவிட வேண்டும். இக்­கல்­லூரி மீதும் மாண­வர்கள் மீதும் உண்­மை­யான அக்­கறைக்கொண்ட அர­சி­யல்­வா­தி­களால் கடந்த காலங்­களில், பத்து பேர்ச் நிலத்தையாவது பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாது போனது என கேள்விக் கேட்கிறேன்.

“எனவே, பொஸ்கோ கல்லூரியின் அபிவிருத்திக்காக, பயன்ப­டுத்த முடி­யாது இருக்கும் அந்த நிதியை
கொட்­ட­க­லையிலுள்ள தோட்டப் பாதை அபி­வி­ருத்­திக்கு பயன்­ப­டுத்துவதற்கு நான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.

பழைய மாண­வர்­கள் மற்றும் கல்­லூரி சமூ­கத்தின் கோரிக்­கைக்கு அமை­யவே, நான் இந்­நி­தியை
பெற்­­றுக்­கொ­டுத்தேன். ஆனால், கட்­டடம் அமைய, கல்­லூரி சமூ­கமும்சரி ஏனை­யோரும் சரி எந்த
நட­வ­டிக்­கை­களையும் எடுக்கவில்லை என்­பது புரிகி­றது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .