2025 ஜூன் 06, வெள்ளிக்கிழமை

முஸ்லிம்கள் பற்றி வரலாற்றில் பதியப்பட்டுள்ளன: எம்.எஸ்.எம்.அனஸ்

Kogilavani   / 2014 ஜூன் 16 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


வர்த்தகத்துறையில் பல்வேறு பிரிவுகளிலும் சிறப்பாக செயலாற்றி சமூக நல்லிணக்கத்திற்கு பெருமை சேர்த்ததாக இலங்கை முஸ்லிம்கள் பற்றி வரலாற்றில் பதியப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியற்துறைத் தலைவர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் தெரிவித்தார்.

கண்டி ஜின்னா நினைவு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கண்டியைச் சேர்ந்த பிரபல சமூக சேவையாளரும் வர்த்தகருமான அல்ஹாஜ் ஏ.எம்.இஸ்மாயிலின்  சேவைநலன் பாராட்டு விழாவில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,  

'இலங்கையின் முஸ்லிம்களது வரலாற்றைப் பின் நோக்கிப் பார்க்கும் போது  பல்வேறு விடயங்கள் புலனாகின்றன. அதில் சிறப்பான ஒரு விடயம் அறிஞர் சித்தி லெவ்வை அவர்களுக்கு உண்டு. காரணம் அவர் கல்விக்காகக் குரல் கொடுத்த ஒருவர். ஆனால்  வரலாற்றில் அவரும் ஒரு பிரபல வர்த்தகர் என்பதும், அவரது தந்தையும் பிரபல வர்த்தகப் பரம்பரை என்பதும் மறைந்துள்ள ஒரு உண்மையாகும்.

இவ்வாறு இலங்கை வாழ் முஸ்லிம்கள் பல்வேறு வர்தகத்துறைகளிலும் கால் பதித்திருந்தனர்.

குருநாகள் முதல் புத்தளம் வரை தென்னந் தோப்புக்களிலும் தெங்கு தொடர்பான வர்hத்தகத்திலும், இரத்தினபுரி, பேருவலை போன்ற பகுதிகளில் இரத்தினக்கற்கள் வர்த்தகத்திலும் இன்னும் மலை நாட்டில் தேயிலை, இறப்பர், கொக்கோ என்றும் சில பகுதிகளில் புடவை மற்றும் ஆடைத் துறையிலும் இன்னும் சில பகுதிகளில் பாதணிகள், இரும்பு இப்படியாக பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்த காலம் இருந்தது.

இவர்கள் அனைவருமே நாட்டின் நலனிற்காகவும் இன நல்லுறவிற்காகவும் பாடுபட்டவர்கள்.

முஸ்லிம்களைப் பொருத்தவரை அறிஞர் சித்திலெவ்வை வாழ்ந்த இடம், விடுதலை வீரர் ஒராபி பாசா வாழ்ந்த இடம். வாப்பிச்சி மரைக்கார் போன்ற பெறியவர்கள் வாழ்ந்த இடம்  என அடுக்கிக் கொண்டே போகலாம்' என அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .