2025 ஜூலை 03, வியாழக்கிழமை

குளவி கொட்டு: 15 பேர் பாதிப்பு

Kogilavani   / 2015 ஜூன் 01 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமச்சந்திரன்

நுவெரலியா, நோர்வூட் போட்ரி தோட்டத்தில் 15 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதுடன் இவர்களில் 10 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழுந்து பறித்துக்கொண்டிருக்கும் போது கழுகு ஒன்று மரத்தில் இருந்த குளவி கூட்டை கலைத்ததினால் குளவிகள் கலைந்து வந்து தம்மை தாக்கியதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

குளவி தாக்குதலுக்கு 13 பெண்களும் 2 ஆண்களும் உள்ளாகியுள்ளதுடன் இவர்களில் 5 பேர் குறித்த தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .