Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஜூன் 15 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமசந்திரன்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய மட்டுக்கலை தோட்டத்தில், நீர் தாங்கியொன்றிலிருந்த நீரை பருகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பெரிய மட்டுக்கலை தோட்டத்தில் குறித்த குடும்பத்தார் மாத்திரம் பயன்படுத்தும் குடிநீர் தாங்கியிலிருந்து நீர் பருகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டு வாந்திபேதி ஏற்பட்டு சுகவீனமடைந்துள்ளனர்.
இதனையடுத்து சுகயீனமடைந்த அனைவரும் லிந்துலை வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுகயீனமடைந்தவர்களில் 2 சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவோரின் உடல்நிலை குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த குடும்பத்தார் பருகிய குடிநீர் தாங்கியில் இனந்தெரியாதோர் நஞ்சு கலந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago