Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 ஜூன் 17 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.செல்வராஜா
எருமை தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மூதாட்டி ஒருவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் திங்கட்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலில் பதுளை, வேவெஸ்ஸ தோட்டத்தை சேர்ந்த பொம்மாயி என்ற 70 வயது மூதாட்டியே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
வினித்தகம பகுதியிலுள்ள காட்டிலிருந்து இரவு நேரங்களில்; வேவெஸ்ஸத் தோட்ட காரியாலய பிரிவுக்குள் நுழையும் காட்டு எருமையானது அங்கு பல்வேறு அட்டூழியங்களை புரிவதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பல வருடங்களாக இந்நிலை தொடர்வதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேற்படி மூதாட்டி தொழிலுக்கு செல்லும்போது தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது. இரவு வேளையில் மட்டுமன்றி, அதிகாலை வேளையிலும் காட்டு எருமையின் நடமாட்டம் தொடர்வதால், அப்பகுதியிலிருந்து காலை வேளையில் பதுளை, பசறை நகரங்களுக்கு தொழிலுக்கு செல்வோரும், பாடசாலை மாணவர்களும் அச்சமடைந்துள்ளனர்.
காட்டு எருமையின் நடமாட்டத்தை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .