Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 ஜூன் 17 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.ஆ.கோகிலவாணி
தமிழர் முற்போக்கு கூட்டணியின் அடுத்தக்கட்ட கூட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதியளவில் ஹட்டன் பகுதியில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூட்டணியின் பொதுச் செயலாளரும் மலையக மக்கள் முன்னணியின் செயலாளருமான லோறன்ஸ், நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இக்கூட்டணியின் முதல்கூட்டத்தின்போது உறுப்பினர்கள் தெரிவு மட்டுமே இடம்பெற்றது. இரண்டாவது கூட்டத்தின் போது மூன்று பிரதான கட்சிகளின் மத்திய குழு உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான வாயப்புகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் 15 இலட்சம் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்று கொடுக்கும் நோக்கில் இக்கூட்டணி அமைக்கப்பட்டிருந்தாலும் பெருந்தோட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்குவதே கூட்டணியின் பிரதான நோக்கம்' என அவர் மேலும் தெரிவித்தார்.
'மலையக தமிழ் தேசியவாதத்தை முதன்மைப்படுத்தி இக்கூட்டணி செயற்படும். வடக்கு,கிழக்கு மக்களுக்காக தமிழத் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு முன்வருகின்றதோ அதேபோன்று தமிழர் முற்போக்கு கூட்டணியும் பெருந்தோட்ட மக்களின் நன்மைகளின் கவனம் செலுத்தும்' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
48 minute ago
58 minute ago