Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 ஜூன் 17 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எனது அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் 100 நாட்கள் வேலை திட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்திக்கான பத்தாண்டு திட்டம் மிக முக்கியமானது என தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம், நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
'2015 ஆம் ஆண்டு செயற்படுத்தப்பட்டிருக்க வேண்டிய பத்தாண்டு திட்டம் இவ்வாண்டு மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதானது எமது பலவீனத்தையே கட்டுகின்றது' என்றும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'பத்தாண்டு திட்டத்தை தயாரிப்பது தொடர்பில் சமூக மட்டத்திலிருந்து பல்வேறு தரப்பினரதும் ஆலோசனைகளை பெறுவுதற்கு களத்தை அமைத்துகொடுத்துள்ளேன். இது மலையகத்தில் ஒரு புதிய அரசியல் கலாசாரமாகும். எதேச்சதிகாரமாக யாரிடமும் எந்த ஆலோசனைகளை பெறாமல் செயற்படும் கலாசாரத்தை நாங்கள் மாற்றியமைத்துள்ளோம்.
அமைச்சு பொறுப்பை கையிலெடுத்தவுடன் நான் முன்னெடுத்த முதல் பணி இந்த பத்து ஆண்டுத் திட்டத்தை தயாரிப்பதற்கான ஏற்பாடுகளேயாகும். அது பல சுற்று கந்துரையாடல்களை அடுத்து கடந்தமாதம் முறையான ஒரு கட்டத்தை அடைந்தது.
முன்புபோல பொருளாதார அபிவிருத்திக்குப் பொறுப்பான அமைச்சினால் தட்டிக் கழிக்கப்படும் சூழல் இன்று இல்லை. நிதி அமைச்சின் ஒத்துழைப்பும் எமக்குக் கிடைக்கும். அந்த பணிகளை ஒருங்கிணைப்பது எனது பொறுப்பு. அமைச்சர் என்ற வகையில் எனது பணியை நான் நிறைவேற்றுவேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
57 minute ago
1 hours ago