Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Sudharshini / 2015 ஜூன் 24 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணி ஸ்ரீ
சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக 10,000 ரூபாவை வழங்குவதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவத்தார்.
சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் தலைமை அதிகாரிகளுக்கான விசேட செயலமர்வு திங்கட்கிழமை (22) கேகாலை மாவட்ட சுகாதார பணிப்பாளர் அலுவக கேட்ப்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து வெர் உரையாற்றுகையில்,
மேற்படி மாகாணத்தில் கலைக்கப்பட்டுள்ள 21 உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகம் மற்றும் பொறுப்பகள் அனைத்தும் சப்ரகமுவ மாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளரின் கண்கானிப்பின் கீழ் அந்தந்த உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மேற்படி மாகாணத்தில் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பொறுப்புகளும் குறிப்பாக நிதி, நிர்வாகம், பரிசீலனை உட்பட சகல பொறுப்புகளும் சபை செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனவே, மாகாணத்தில் உள்ளுராட்சி சபை செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொருப்புகளை கவனத்தில் கொண்டு தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் சபை செயலாளர்களுக்கு 10,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெற்று மக்களால் உள்ளூராட்சி சபைக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்பு சபை செயலாளர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு நிறுத்தப்படும்.
சப்ரகமுவ மாகாணத்தில் கலைக்கப்படாத உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்கள் மற்றும் ஆணையாளர்களுக்கு இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது என்று சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாகாண பிரதான செயலாளர் எச்.பி.குலரத்ன உட்பட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் ஒரு மாநகர சபையும். மூன்று நகரசபையும், 25 பிரதேச சபை அடங்களாக மொத்தம் 29 உள்ளூராட்சி சபைகள் உள்ளதுடன் அதில் 21 உள்ளூராட்சி சபைகள் தற்போது கலைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
42 minute ago
2 hours ago