Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Kogilavani / 2015 ஜூலை 10 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெறுமனே 6,000 ரூபாய் கொடுப்பனவை நம்பி எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்க முடியாது. கடந்த காலங்களில் ஆசிரியர் நியமனங்களை பெற்றவர்கள் 30,000 ரூபாய் வரை பெறும்போது, வெறும் 6,000 ரூபாய் கொடுப்பனவுக்காக கற்றவர்களை, பொறுப்பற்ற அரசியல்வாதிகள் ஏமாற்றுவதால், நிலைமை விபரீதமாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் ஆர்.யோகராஜன் தெரிவித்தார்.
சமுதாயத்தின் நலன் கருதி எடுக்கப்படும் அரசியல் ரீதியிலான திட்டங்களில் நிதானமில்லாத போக்கும், தொழில் தர்மமும் கடைப்பிடிக்கப்படாமையே ஆசிரிய உதவியாளர்கள் தெரிவில் குழப்பங்களும் விமர்சனங்களும் ஏற்படுவதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டவர்களின் கொடுப்பனவை, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் 10.000 ரூபாயாக அதிகரிப்பதற்கு உறுதியளித்துள்ளார். அது எந்த அடிப்படையில் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
தேசிய கல்வித்திட்டத்தில் உள்வாங்கப்படும் என்ற உறுதி வழங்கப்பட வேண்டும். இதுவரை 2,166 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 834 பேருக்கு நியமனம் வழங்கப்படாமல் உள்ளதெனவும் தெரிகிறது' என்றும் அவர் தெரிவித்தார்.
படித்த சமூகத்தை வழிநடத்தி வருங்கால சந்ததிகளின் கல்வியின் மேம்பாட்டை உருவாக்குவதற்கும் உயர்த்துவதற்கும் முன்வந்துள்ளவர்கள், தாங்கள் செய்த தொழிலையும் விட்டுவிலகி பெரும் எதிர்பார்ப்புடன் ஆசிரியர் உதவியாளர் தொழிலை நம்பி வந்த போதும் ஏமாற்றமும் உறுதியற்ற தன்மையும் பலரது வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் காலத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெளிவுபடுத்தி நிரந்தரமான, கௌரவம் நிறைந்த சம்பளத்தை பெறும்வகையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முழு மூச்சுடன் செயல்படுவேன்' என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
48 minute ago
52 minute ago
2 hours ago