R.Maheshwary / 2022 ஜனவரி 04 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நதீக தயாபண்டார, சேஹ்ன் செனவிரத்ன
கண்டி- இரண்டாம் இராஜசிங்க மாவத்தையிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் வளிசீராக்கி( ஏசி) இயந்திரம் ஒன்று பழுதுபார்க்கப்படும் போது, அதிலிருந்த எரிவாயு குழாய் வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இதனை பழுதுபார்த்த பராமரிப்பு தொழிநுட்பவியலாளரான 24 வயதுடைய மொஹமட் ஹிசாம் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் எரிகாயங்களுக்கு உள்ளான அவர், பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .