Princiya Dixci / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொரணப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்லப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (25) ஒன்பது எருமை மாடுகளைத் திருடிய மூவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் 30, 40 மற்றும் 43 வயதுக்குட்பட்ட மில்லனிய, ஹொரண மற்றும் பண்டாரகமப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர்கள் மூவரையும், இன்று வெள்ளிக்கிழமை (26) ஹொரண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக ஹொரணப் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .