2025 மே 08, வியாழக்கிழமை

கட்டுநாயக்கவில் சீனப் பிரஜைகள் கைது

Princiya Dixci   / 2016 நவம்பர் 15 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் இருந்து இலங்கைக்குச் சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரெட் பெக்கெட்டுகளுடன் சீனப் பிரஜைகள் நால்வரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகள், இன்று செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை 5.40க்கு, கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 32 இலட்சம் ரூபாய் பெறுமதியான 410 சிகரெட் பெக்கெட்டுக்கள்  மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நால்வரில் இரண்டு பெண்களும் அடங்குவதாக தெரியவருகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X