2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மஹரகம நகையக கொள்ளையரை கண்டுபிடிக்க 4 விசேட குழுக்கள்

Super User   / 2010 டிசெம்பர் 27 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

மஹரகம நகரிலுள்ள நகை கடையொன்றினுல் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொள்ளை முயற்சியின் போது பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திலிருந்து தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்வதற்காக மிரிஹான பொலிஸ் நிலையத்தால் 4 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் தயா சமரவீர தெரிவித்தார்.

ஒரு கொள்ளையர் கொல்லப்பட்ட நிலையில் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பியோடிய மற்றைய சந்தேக நபரை கைது செய்வதற்காகவே தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின் போது கொல்லப்பட்டவர் மொறட்டுவ லக்ஷபதிய பகுதியை சேர்ந்தவராவர். இரண்டு சந்தேக நபர்களிடமிருந்தும் பெருந்தொகையான ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது என பிரதி பொலிஸ் மா அதிபர் சமரவீர குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .