2025 ஜூன் 26, வியாழக்கிழமை

புதுவருட ரொக்கட்டினால் தீ விபத்து ; 50 லட்ச ரூபா பெறுமதியான சொத்துகள் சேதம்

Super User   / 2011 ஜனவரி 02 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

புதுவருடப் பிறப்பின்போது கொளுத்தப்பட்ட ரொக்கட் ஒன்றினால் ஏற்பட்ட தீ பரவியதால், நுகேகொடை அனுலா மகாவித்தியாலத்தின்  50 லட்சம் ரூபா பெறுமதியான சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேற்படி ரொக்கட், ஜன்னல் துவாரத்துக்கூடாக பாடசாலை கட்டிடமொன்றிற்குள் நுழைந்துள்ளது. இதனால்  மெத்தையொன்று தீப்பற்றத் தொடங்கியது என அமைச்சர் பந்துல குணவர்தன டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.

'சம்பவ இடத்தை நான் பார்வையிட்டேன். 50 லட்சம் ரூபா பெறுமதியான சொத்துகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த பாடசாலைக் கட்டிடத்தின் கூரையை திருத்துவதற்கு அயலிலுள்ள குடியிருப்பாளர்கள் இணங்கியுள்ளனர்' என அவர் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0

  • Fahim Sunday, 02 January 2011 09:07 PM

    பட்டாசு கொளுத்துவதைத் தடை செய்யாதவரை இவ்வாறு நாசம் விளைவதைத் தடுக்க முடியாது.

    Reply : 0       0

    xlntgson Friday, 14 January 2011 09:32 PM

    Pyromaniacs! பைத்தியக்காரத்தனமான நெருப்பில் விளையாட்டு!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .