2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஒரே நாடு, ஒரே ஜாதி என்பதே எனது பார்வை: அமைச்சர் மேர்வின் சில்வா

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 28 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எச்.எம்.பௌஸான்)

இந்த நாட்டில் முஸ்லிம், சிங்களம், தமிழ் என்ற வேறுபாடு இல்லையென்று ஜனாதிபதி கூறுவதுபோன்று ஒரே நாடு, ஒரே ஜாதி என்பதே எனது பார்வையாகும். இன்று நாம் மனிதநேயம் உடையவர்களாக வாழப் பழக வேண்டும்.


இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மல்வானை அல் முபாரக் தேசிய கல்லூரியில் நடைபெற்ற இலவச வைத்திய முகாமில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே,  பொதுசன உறவுகள் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,


இன்று எம்மில் கற்ற சில மடையர்கள் உள்ளனர். இவர்கள் பல்கலைக்கழகங்கள், அரச திணைக்களங்கள், நிறுவனங்களென பல இடங்களிலும் இருந்துகொண்டு தமக்கு சார்பாக ஒரு திட்டத்தை தீட்டி காடைத்தனங்களில் ஈடுபடுகின்றனர். இது மட்டுமல்ல வேலைநிறுத்தங்களென பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.; இவர்களை வழிநடத்தும் ஒரு குழு நாடாளுமன்றத்தில் உள்ளது. இவ்வாறானவர்களை நாம் விரும்பமாட்டோம். இவர்களை நாம் அடித்தோம். பொல்லால் தாக்கி விரட்டினோம். இவர்கள் சமூகத்துக்கு சிறந்தவர்கள் அல்ல மக்களை தவறாக வழிநடத்தக்கூடியவர்கள். எனவே தான் நாம் அவர்களை துரத்தினோம்.
இன்று இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் முன்மாதிரியாக இவ்வாறானதொரு சிறந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கின்றனர். இவர்களை நாம் பாராட்டுகின்றோம்.
 
இ;ன்று முஸ்லிம்கள் புனித வேதமாகிய இஸ்லாத்தை பின்பற்றி பரிசுத்த குர்ஆனி;ன் வழிகாட்டலில் தமது வாழ்க்கையை நடத்துகின்றனர். அன்று மக்காவில் குர்ஆன் இறங்கியபோது அதை சரியாக விளங்கி ஓதக்கூடியவராக முஹம்மது நபி மாத்திரம் இருந்தார். அவர் குர்ஆனை கற்று அதனை மக்களுக்கு கூறி மக்களை அதன்பால் நிதானமாக மனிதநேயத்தோடு அழைத்தார்கள். இதனால் தான் அவர் பக்கம் அன்றைய மக்கள் ஈர்க்கப்பட்டனர்.


அவர்கள் அன்று வேலைநிறுத்தம் செய்யவில்லை. மக்கள் மத்தியில் குழப்பங்கள், சர்ச்சைகள் வேறுபாடுகளை தோற்றுவிக்கவில்லை. மக்களோடு மக்களாக அன்போடு பாசத்தோடு மனிதநேயத்தோடு பழகினார்கள். அதனாலதான் அவரகள் மதீனாவுக்குச் சென்றபோது அப்பிரதேச மக்கள் அவரை வரவேற்றனர். இன்று இஸ்லாமியர்களிடம் இவ்வாறான நல்ல பண்புகள் உள்ளதற்கான காரணம் இதுவே என்றார்.


இதேவேளை, இங்கு உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர் உரையாற்றுகையில,; இன்று எமது இந்நிகழ்விற்கு பொதுசன உறவுகள் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா வந்ததையிட்டு நாம் பெருமையடைகின்றோம்.
அவர் சிறந்த மனித நேயமுடையவர். மக்களோடு மக்களாக பழகுகின்றார். இதனால் தான் ஜனாதிபதியும் இவரை சிறந்தவராக கண்டு இவ்வாறானதொரு அமைச்சுப்பதவியை வழங்கியிருக்கின்றார் என்றார்.


மல்வானை அல்முபாரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவ குழுவினர் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் பிரபல தொழிலதிபர் சமூக சேவையாளர் இஸ்மாயில் ஹாஜியார் ஜனாதிபதியின் சிரேஷ்ட பிரதிச்செயலாளர் சேபால ரத்நாயக பாடசாலை அதிபர் மொஹமட் இல்யாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • Atheek Sunday, 28 November 2010 11:48 PM

    மல்வானை விஷேஷம் ! நன்றி முஹம்மத் பாவ்சான் !

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .