2025 ஜூன் 26, வியாழக்கிழமை

காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூரிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 02 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உபதலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான காலஞ்சென்ற நூர்தீன் மசூரின் ஜனாசாவிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது இறுதி அஞ்சலிகளைச் செலுத்தினார்.

இன்று மாலை கொழும்பு பார்க் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக அவரது ஜனாசா வைக்கப்பட்ட நிலையில் அங்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது இறுதி அஞ்சலிகளைச் செலுத்தியதுடன் குடும்பத்தினருக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார். இச்சமயம் அமைச்சர்கள் தினேஸ் குணவர்த்தன, ரவூப் ஹக்கீம், மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நூர்தீன் மசூர் அவர்களின் இறுதி நிகழ்வுகள் மன்னார் முஸ்லிம் மையவாடியில் நாளை அதிகாலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .