2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பத்தரமுல்லையில் கைப்பணிப் பொருட்கள் சந்தைப்படுத்தல் கிராமம் திறப்பு

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 02 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் தேசிய அருங்கலைகள் பேரவையின் ஏற்பாட்டில் கைப்பணிப் பொருட்கள் சந்தைப்படுத்தல் கிராமம் இன்று வியாழக்கிழமை பத்தரமுல்லையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய அருங்கலைகள் பேரவையினால் பத்தரமுல்லை ஜனகலா நிலைய கட்டிடத்திற்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ள கைப்பணிப் பொருட்கள் சந்தைப்படுத்தல் கிராமத்தை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிரதியமைச்சர் வீரகுமார திஸாநாயக்க ஆகியோரின் அழைப்பின் பேரில் நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நினைவுக் கல்லினை தீரைநீக்கம் செய்து வைத்தார்.

இந் நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். இவருடன் கலாசார மற்றும் கலை விவகார அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்கவும் கலந்து கொண்டார்.

முன்னதாக பிரதம அதிதியையும் கௌரவ அதிதியையும் ஏனையோரையும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

நினைவுக்கல் திரைநீக்கத்தை அடுத்து அதிதிகள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த கைப்பணிப் பொருட்களைப் பார்வையிட்டதுடன் துறைசார்ந்தவர்களுடனும் கலந்துரையாடி அவை தொடர்பான விளக்கங்களையும் கேட்டறிந்து கொண்டனர்.

தொடர்ந்து அதிதிகள் கிராமிய கலைகள் மண்டபத்தில் தேசிய அருங்கலைகள் பேரவைத் தலைவர் புத்தி கீர்த்தி சேன தலைமையில், சுடர்களை அதிதிகள் உள்ளிட்டோர் ஏற்றி வைத்தனர்.

அங்கு இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா மற்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரதியமைச்சர் வீரகுமார திஸநாயக்க உரையாற்றியதை தொடர்ந்து சிறப்புரையினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிகழ்த்தினார்.

அங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் வீரகுமார திஸாநாயக்கா, அமைச்சரின் செயலாளர் சிவஞானசோதி மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவைத் தலைவர் புத்தி கீர்த்திசேன ஆகியோர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கி வைத்தனர்.

நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சுக்கு கீழான துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .