2025 ஜூன் 26, வியாழக்கிழமை

போதைப்பொருள் தடுப்புக் குறித்து ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 23 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( அப்துல்லாஹ் )

போரூட்  நிறுவனத்தின் அனுசரணையில்  மாஸ் மீடியா போரம்    பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான  செயலமர்வொன்றினை   கடந்த 21 ஆம்  22ஆம் திகதிகளில்  கொழும்பில் நடத்தியது.  

மூவினத்தையும் சேர்ந்த  பிராந்திய ஊடகவியலாளர்கள்  நாட்டின் பல பாகங்களிலுமிருந்து   இந்த  செயலமர்வில் கலந்துகொண்டனர்.

மதுபானம்இ  புகையிலைஇ  போதைப்பொருட்கள் என்பவற்றைத்  தடுத்தல் என்ற தலைப்பில் இந்த செயலமர்வு நடைபெற்றது.

போரூட்    நிறுவனத்தின் பதில் வதிவிட பிரதிநிதி ஷாக்யா நாணயக்கார   மதுபானம், போதைப் பொருள் தடுத்தல் திட்ட அதிகாரி ரவி கந்தையாஇ  நிகழ்ச்சி அதிகாரி மஹிந்த ஜயசிங்க   ஆகியோர் செயலமர்வினை நடத்தினர்.

2009 ஆம் ஆண்டு சிறந்த சுற்றாடல் ஊடகவியலாளருக்கான   விருது பெற்ற  கருணாரத்ன  கமகே  மாஸ் மீடியா போரத்தினால் ஒரு இலட்சம் ரூபாய் பரிசு வழங்கி  பாராட்டப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .