2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கொழும்பு மாநகர சபை தேர்தலில் மனோ கணேசன் தலைமையில் ஜ.ம.மு. போட்டி?

Super User   / 2011 ஜனவரி 03 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யொஹான் பெரேரா)

கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணியின் (ஜ.ம.மு) தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனை மேயர் வேட்பாளராக நிறுத்தி போட்டியிட வேண்டும் என கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் விருமபுவதாக ஜ.ம.மு செயலாளர் கலாநிதி ஏ.என்.குமரகுருபரன டெய்லிமிரருக்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் ஜனவரி 7ஆம் திகதி நடைபெறவுள்ள அரசியல் குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நான்கு ஆசனங்களையும் மேல் மாகாண சபையில் இரு ஆசனங்களையும் கடந்த காலத்தில் நாடளுமன்றத்தில் ஒரு ஆசனத்தையும் பெறுமளவுக்கு வாக்குப்பலமுள்ள கட்சி என்ற வகையில் கொழும்பு மாநகர சபை தேர்தலில் போட்டியிட ஜனநாயக மக்கள் முன்னணியின் அங்கத்தவர்கள் அக்கறையாக உள்ளனர் என அவர் கூறினார்.

கட்சியின் பல அங்கத்தவர்கள் மனோ கணேசனை மேயராக நிறுத்தி கொழும்பு மாநகர சபை தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டுமென விரும்புவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை வடக்கு கிழக்கு உட்பட தமிழ் பகுதிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஏனைய தமிழ் கட்சிகளுடன் கூட்டு சேர வேண்டும் என கட்சி விரும்புவதாகவும் அவர் கூறினார்.

இது குறித்து 7ஆம் திகதி நடைபெறவுள்ள அரசியல் குழு கூட்டத்தில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் கட்சி தலைவர் மனோ கணேசன் அன்றைய தினம் தனது தீர்மானத்தை அறிவிப்பார் எனவும் கலாநிதி ஏ.என்.குமரகுருபரன் கூறினார்.

2006ஆம் ஆண்டு தவிர்ந்த ஏனைய காலங்களில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டு சேர்ந்தே போட்டியிட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .