Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 01 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன்)
வடமராட்சி கிழக்கில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து 2 ஆயிரத்தி 455 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மெற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:
எதிர்வரும் 9ஆம், 10ஆம் திகதிகளில் குறித்த பிரதேசங்களில் உள்ள 6 கிராமசேவகர் பிரிவுகளில் இந்த மீள்குடியேற்றம் இடம்பெறவள்ளது. 2 ஆயிரத்தி 455 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்தி 531 பேர் இவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர்.
செம்பியன்பற்று வடக்கு, செம்பியன்பற்று தெற்கு, மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, ஆழியவளை ஆகிய கிராமங்களில் இவர்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்.
இதேவேளை - இவர்களில் ஆயிரத்தி 385 குடும்பங்கள் தமது வாழ்வாதாரமாக மீன்பிடித்தொழிலைக் கொண்டுள்ளமையால் அதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். அத்துடன் அடிப்படை வசதிகளை யாழ். செயலகம் ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது. – என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வடமராட்சி கிழக்குப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் தற்போது இராமில் நலன்புரிநிலையம், மணற்காடு திறந்தவெளி முகாம் மற்றும் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
24 minute ago
1 hours ago