Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
குணசேகரன் சுரேன்
யாழ்.ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படும் திராட்சை, வாழைப்பழம் மற்றும் பப்பாசி ஆகியவற்றின் உற்பத்தியை 2016ஆம் ஆண்டு மேலும் அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக யாழ்.மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படும் பழ வகைகளில், இந்த மூன்றும் முன்னிலை வகிக்கின்றன. இவற்றின் விற்பனையால் செய்கையாளர் போதிய பயனடைகின்றனர்.
இதனை அடிப்படையாக வைத்து இவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார ரீதியில் யாழ்ப்பாணத்தை முன்னேற்ற முடியும்.
பப்பாசி, இந்தாண்டு 2,480 மெற்றிக்தொன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனை 2016ஆம் ஆண்டு 4,500 மெற்றிக்தொன் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
வாழைப்பழம், கடந்த ஆண்டு 8,340 மெற்றிக்தொன் உற்பத்தி செய்யப்பட்டது. இதனை 2016ஆம் ஆண்டு 22,000 மெற்றிக்தொன்னாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, திராட்சை உற்பத்தியானது, கடந்த ஆண்டு 3,052 மெற்றிக்தொன் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் அதனை மேலும் அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago