2025 ஜூலை 12, சனிக்கிழமை

அதிகாரிகளின் உணவில் இரும்புக்கம்பி

Thipaan   / 2015 நவம்பர் 28 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

பாவனை அதிகாரசபை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் இரும்புக்கம்பிகள் இருந்தமை வெள்ளிக்கிழமை (27) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என பாவணை அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் இடம்பெற்றமை பாவனை அதிகார சபை அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் நடவடிக்கையில் ஈடுபட்ட பாவனை அதிகார சபை அதிகாரிகள் மதியம் உணவு உண்பதற்கு யாழ். நகரங்களில் உள்ள குறித்த கடைக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட புரியாணியில் சிறிய இரும்பு கம்பிகள் காணப்பட்டுள்ளது.

உடனடியாக அதிகாரிகள் உணவினை சீல் செய்து தம்முடன் எடுத்து வந்துள்ளனர்.

மேற்படி உணவகத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .