Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
நியதிகளை மீறி வாகனங்களைச் செலுத்தி, வீதியில் செல்லும் நபருக்கு உயிர்ச் சேதத்தை உண்டுபண்ணும் வாகன சாரதிகளை கட்டுப்படுத்த இறுக்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனிடம் கோரிக்கை முன்வைப்பதற்கான கையெழுத்துச் சேகரிக்கும் நடவடிக்கையில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர், வெள்ளிக்கிழமை (12) ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்துக்கு அருகில் கூடிய பாடசாலை மாணவர்களின் பெற்றோர் இந்தக் கையெழுத்துச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இலங்கை போக்குவரத்துச் சபையுடன் போட்டிபோட்டுக் கொண்டு ஓடிய தனியார் பஸ், திருநெல்வேலிச் சந்தியில் முச்சக்கரவண்டியை மோதியதில், அதில் பயணித்த சென்.பொஸ்கோ வித்தியாசாலையில் கல்வி கற்கும் பா.சுவஸ்திகம் (வயது 6) என்ற பாடசாலை மாணவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடக்காத வகையில் நீதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி இந்தக் கையெழுத்துச் சேகரிக்கப்பட்டது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago