Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கர்ணன்
அன்னதானக் கந்தன் என்றழைக்கப்படும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) நடைபெறவுள்ள நிலையில், தேர்த்திருவிழாவில் கலந்துகொள்ளவரும் பொதுமக்களுக்காக அனைத்து பிரதேசங்களிலும் இருந்து பஸ் சேவை நடத்தப்படும் என வடமராட்சி தனியார் பஸ் சங்கம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலை நிர்வாகம் ஆகியோர் தெரிவித்தனர்.
கடந்த 14ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய செல்வச்சந்நிதி ஆலயத்தின் மஹோற்சவ திருவிழாவின் சப்பறத் திருவிழா வியாழக்கிழமையும் (27) தேர்த்திருவிழா வெள்ளிக்கிழமையும் (28) தீர்த்தத்திருவிழா சனிக்கிழமையும் (29) இடம்பெறவுள்ளது. இந்த முக்கிய திருவிழாவில் கலந்துகொள்ளவரும் மக்களுக்கான பஸ் சேவைகள் அனைத்து பிரதேசங்களிலும் இருந்து நடத்தப்படவுள்ளன.
திருவிழாக் காலத்தில் ஆலயத்தைச் சூழவுள்ள சுமார் 10 அன்னதான மடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது. சனிக்கிழமை (29) மாலை நடைபெறும் மௌனத் திருவிழாவுடன் ஆலயத்தின் மஹோற்சவம் நிறைவு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
38 minute ago
45 minute ago
52 minute ago