2025 ஜூன் 25, புதன்கிழமை

அனுமதியின்றி இயங்கும் மதுபானசாலைகள் தொடர்பில் கவனம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணத்தில் 60 மதுபான நிலையங்கள் உள்ளதுடன், அவற்றில் சில மதுபான நிலையங்கள் சட்டரீதியாக இயங்கவில்லை. யாழ்.மாவட்டத்தில் அனுமதியின்றி இயங்கும் மதுபானசாலைகள் தொடர்பில் வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பள்ளிஹக்கார கவனம் செலுத்தி வருகின்றார் என யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டம், யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (10) நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'மதுபானசாலைகள் மதுவரித் திணைக்களத்தின் சட்ட நியதிப்பாடுகளுக்கு ஏற்ற வகையில் இயங்குகின்றனவா? என்பது தொடர்பில் ஆராயுமாறு, நில அளவைத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. 

ஆராய்வில் 9 மதுபானசாலைகளின் அறிக்கைகள் வடமாகாண ஆளுநருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் சில மதுபானசாலைகள் சட்ட வரைமுறைக்கு உட்படாமல் இருக்கின்றன' என்பதைச் சுட்டிக்காட்டினார்.

'இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுத்தல் மற்றும் மேற்கொண்டு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பில் ஆளுநர் அதிக அக்கறையுடன் செயற்படுகின்றார்' என மாவட்டச் செயலாளர் மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .