2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘அரசியல் கைதிகளை, ஏனைய கைதிகளிடம் இருந்து விலக்கி வைக்க வேண்டும்’

Editorial   / 2018 ஜனவரி 29 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜிதா

சிறைச்சாலையில் தடுத்து வைக்கபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, ஏனைய கைதிகளிடம் இருந்து விலக்கி வைக்க வேண்டும் எனவும் இப்பிரச்சினையை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரவேண்டும் எனவும் கோரி அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இன்று (29) மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

முதலமைச்சரின் அலுவலகத்தில் முதலமைச்சரைச் சந்தித்த அரசியல் கைதிகளின் உறவினர்கள் குறித்த மகஜரை கையளித்துள்ளனர்.

இதன்போது, அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்வதாக முதலமைச்சர் அரசியல் கைதிகளின் உறவினர்களிடம் தெரிவித்தார்.

அதேவேளை, மருத்துவ தேவையுடைய அரசியல் கைதியின் மருத்துவ தேவையினை நிறைவு செய்வதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தி, முதலமைச்சரிடம் அரசியல் கைதியின் உறவினர்கள் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .