Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Thipaan / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
ஆவரங்கால் பகுதியில் கரப்பந்தாட்ட போட்டியின் போது 75,000 ரூபாய் பெறுமதியான அலைபேசி திருடியவரை 25,000 ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, சனிக்கிழமை (29) அனுமதியளித்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் வழக்கினை எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற கரப்பந்தாட்ட போட்டியின் போது இளவாலை பகுதியினை சேர்ந்த நபர் ஒருவரின் அலைபேசி காணாமல் போயிருந்தது.
காணாமல் போன அலைபேசியினை தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் புத்தூர் பகுதியினை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனை அச்சுவேலி பொலிஸார் வெள்ளிக்கிழமை (28) கைது செய்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .