2025 ஜூன் 25, புதன்கிழமை

அழுகிய நிலையில் சடலம் மீட்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 13 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

காரைநகர் சிவகாமி அம்மன் கோயிலடியில் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து சனிக்கிழமை (12) அழுகிய நிலையில் சடலமொன்றை மீட்டதாக, ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

அவருடைய வீட்டில் தனிமையில் இருக்கும் போதே இவர் உயிரிழந்துள்ளார் என்றும் அவர் வேலுப்பிள்ளை சந்திரகாந்தன் (வயது 47) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், கடந்த 01ஆம் திகதி சாவகச்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் செல்வதாக கூறி சென்றுள்ளார். அவருடைய மனைவியும் ஆனைக்கோட்டையிலுள்ள உறவினர் வீட்டுக்குச் செல்வதாகச் சென்றுள்ளார்.

எனினும் சாவகச்சேரிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற நபரே அவருடை வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் சாவகச்சேரியில் இருந்து எப்போது தன்னுடைய வீட்டுக்கு வந்தார் என்பது தெரியாது என்றும் அவருடைய மனைவி இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்றும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அயலவர்கள் தெரிவித்ததையடுத்து இவருடைய சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .