Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஜனவரி 03 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் ஏழுவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், செவ்வாய்க்கிழமை (03) உத்தரவிட்டார்.
கடந்த டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி, நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 7 மீனவர்கள் இரண்டு விசைப்படகுடன் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த மீனவர்களின் வழக்கு, இன்று (03) மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
மீனவர்களை விடுவிப்பதற்குரிய பரிந்துரை சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து கிடைக்பெறாததன் காரணத்தினால் விளக்கமறியலில் உள்ள மீனவர்களின் விளக்கமறியலை மேலும் நீடித்து நீதவான் உத்தரவிட்டார்.
19 minute ago
42 minute ago
50 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
42 minute ago
50 minute ago
55 minute ago