2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 நவம்பர் 30 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நெடுந்தீவுக்கு அண்மிய கடற்பரப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் உத்தரவிட்டார்.

இந்தியா, தமிழகம், இராமநாதபுரத்திலிருந்து 2 படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்களில் 16 வயதுடைய சிறுவனும் உள்ளடங்கியிருந்தார்.

மீனவர்களை, கடற்படையினர் யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறையினரிடம் கையளித்தனர். நீரியல் வளத்துறையினர், நீதவானின் வாசஸ்தலத்தில் மீனவர்களை ஆஜர்ப்படுத்தினர். 

இதன்போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .