2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

George   / 2016 நவம்பர் 20 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காரைநகர் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 11 பேரையும்,  எதிர்வரும் டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிவான் இராமலிங்கம் சபேசன், ஞாயிற்றுக்கிழமை (20) உத்தரவிட்டார்.

தமிழ்நாடு, இராமேஸ்வரம் பகுதியில் இருந்து இரண்டு விசைப்படகுடன் நுழைந்து, இலங்கை கடற்பரப்பினை அண்மித்த நெடுந்தீவு கடற்பரப்பினுள் மீன்பிடித்த இந்திய மீனவர்களை காரைநகர் கடற்படையினர் சனிக்கிழமை (19) மாலை கைது செய்திருந்தனர்.

மீனவர்களை பொறுப்பேற்ற யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகள், மேலதிக விசாரணையின் பின்னர், ஊர்காவற்துறை பதில் நீதவானின் வாசஸ்தலத்தில் இன்று  மாலை ஆஜர் செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X