Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏம்.எம்.எம்.றியால், செவ்வாய்க்கிழமை (05) உத்தரவிட்டார்.
இந்தியா, இராமேஸ்வரம் பகுதியிருந்து விசைப்படகு ஒன்றில் வந்த குறித்த 4 இந்திய மீனவர்களும் நெடுந்தீவுக்கு அண்மிய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, செவ்வாய்க்கிழமை (05) அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களையும் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏம்.எம்.எம்.றியால் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
4 hours ago
9 hours ago
30 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
30 Sep 2025