2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இந்திய மீனவர்கள் நால்வர் கைது

Gavitha   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

“இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களை, நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்” என்று யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள உதவிப் பணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா தெரிவித்தார்.

இந்த நான்கு இந்திய மீனவர்களும் இன்று செவ்வாய்க்கிழமை (05) அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா, தமிழகம், இராமேஸ்வரம் பகுதியிருந்து விசைப்படகு மூலம் வருகை தந்து அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளனர்.

இந்த மீனவர்களைக் கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்று, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X