Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
குணசேகரன் சுரேன்
இந்திய றோலர் படகுகள், யாழ்ப்பாண கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதால் எதிர்பார்த்தளவுக்கு மீன் உற்பத்தியை மேற்கொள்ள முடியவில்லையென மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி, புதிய தொழில்நுட்பம் தொடர்பில் விழிப்புணர்வு இல்லாமை மற்றும் ஆழ்கடல் மீன்பிடிக்கான போதிய வசதிகள் இன்மையால் யாழ்;ப்பாணத்தின் மீன் உற்பத்தியானது பாதிக்கப்படுகின்றது.
இருந்தும், யாழ்ப்பாணத்தின் மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, பருத்தித்துறை வடக்கு மற்றும் கிழக்கு மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், மீனவர்களுக்கான வாழ்வாதார உதவிகளுக்காக 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திட்டம், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, புதிய மீன்பிடித் தொழில்நுட்பங்களை வழங்கல், கடல்தாவரங்கள் வளர்த்தல், நண்டு வளர்த்தல், கடல் வெள்ளரிக்காய் உற்பத்தியை மேற்கொள்ளல் ஆகிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், மீன் ஏல விற்பனை மண்டபம், சூழல் வெளிச்சம், வெளிச்சவீடுகள் போன்ற உட்கட்டுமான வசதிகளும் செய்யப்படவுள்ளன என அந்தத் தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago