2025 ஜூலை 03, வியாழக்கிழமை

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Thipaan   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்பினை அண்மித்த பருத்தித்துறை கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் 9 பேரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராசா, புதன்கிழமை (28) உத்தரவிட்டார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து ஒரு விசைப்படகில் வந்து மீன்பிடித்த மேற்படி மீனவர்களை காங்கேசன்துறை கடற்படையினர் கடந்த 14ஆம் திகதி கைது செய்தனர். அவர்களிடமிருந்து 945 கிலோகிராம் மீன்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.

கடற்படையினரிடம் இருந்து மீனவர்களைப் பொறுப்பேற்றுகொண்ட யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .