Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜனவரி 14 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் அறுவரையும் தொடர்ந்தும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இராமலிங்கம் சபேசன், வியாழக்கிழமை (14) உத்தரவிட்டார்.
இராமேஸ்வரம் பகுதியிலிருந்து ஒரு விசைப்படகில் வந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கடந்த 2015 டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி காங்கேசன்துறை கடற்கடையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள், யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதனையடுத்து, குறித்த மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில், குறித்த மீனவர்களை நீதிமன்றத்தில் மீண்டும் வியாழக்கிழமை (14 ஆஜர்செய்த போது, அவரகளது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .