2025 ஜூலை 19, சனிக்கிழமை

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

George   / 2016 ஜனவரி 29 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நெடுந்தீவினை அண்மித்த காரைநகர் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் மூவரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டார்.

கடந்த 17ஆம் திகதி ஒரு விசைப்படகுடன் வந்து காரைநகர் கடற்;பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த மூவரையும் கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் பகுதியினை சேர்ந்த ராமையா பாலசுப்பிரமணியம் (வயது33), கலைஞன் சந்தோஸ்குமார் (வயது 28), சந்திரன் பார்த்தீபன் (வயது19) ஆகிய மூவருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X