Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூன் 30 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
- செல்வநாயகம் கபிலன்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 இந்திய மீனவர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் நீடித்து, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், இன்று வியாழக்கிழமை (30) உத்தரவிட்டார்.
நெடுந்தீவுக்கு மேற்கே கடந்த 02ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த 04 இந்திய மீனவர்களும், நெடுந்தீவுக்கு வடக்கே கடந்த 05ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 04 மீனவர்களும், காரைநகர், கற்கோவளத்தில் கடந்த 15ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 03 இந்திய மீனவர்களுக்குமே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .