2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Gavitha   / 2016 நவம்பர் 15 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு இந்திய மீனவர்களுக்குமான விளக்கமறியலை, எதிர்வரும் 28 ஆம் வரை நீடித்து, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் செவ்வாய்க்கிழமை (15) உத்தரவிட்டார்.

நெடுந்தீவு கடற்பரப்பின் 8 கடல் மைல் தொலைவில், கடந்த 01ஆம் திகதி ஒரு விசைப்படகுடன் வந்து, சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்களை, காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பின்னர் கடற்றொழில் நீரியல்வளத்துறை மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே குறித்த நான்கு இந்திய மீனவர்களின் விளக்கமறியலும் மீண்டும் 14 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X