2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

இந்திய மீனவர்கள் 10 பேருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பேரில் கடந்த 10ஆம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை, நேற்று திங்கட்கிழமை (21) உத்தரவிட்டுள்ளார்.

தமிழக, இராமநாதபுரம் பகுதியிலிருந்து படகொன்றில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்த மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களை யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X