2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இந்திய மீனவர்கள் 15 பேர் கைது

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் பருத்தித்துறைக்கு அண்மித்த கடற்பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை இந்திய மீனவர்கள் 15 பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

2 படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள், பருத்தித்துறை பொலிஸார் ஊடாக யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

இம்மீனவர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்துவதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வடமாகாண கடற்றொழிலாளர் இணையம், யாழ்.மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனம் மற்றும் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் ஆகியன இணைந்து நாளை புதன்கிழமை (23) அறவழிப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .