2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்கள் 19 பேர் கைது

Gavitha   / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், பருத்தித்துறைக்கு அண்மைய கடற்பரப்பில் வைத்து சனிக்கிழமை (10) அதிகாலை 19 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மீனவர்கள் மீன்பிடித்த 2 படகுகளும் உபகரணங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்படையினர் தங்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X