2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்கள் 9 பேர் கைது

George   / 2015 நவம்பர் 26 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நெடுந்தீவுக்கு அண்மிய கடற்பரப்பில் வைத்து 9 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் வியாழக்கிழமை (26) அதிகாலை கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இராமேஸ்வரம் பகுதியிலிருந்து 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்படையினர், நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .