2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்கள் 8 பேர் கைது

Gavitha   / 2015 நவம்பர் 29 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில், 8 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) கைது  செய்துள்ளனர்.

நெடுந்தீவுக்கு அண்மிய கடற்பரப்பில் வைத்து, 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களே, கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவர்கள் இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் எட்டு பேரும்  நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும்  அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .