2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இந்திய மீனவர்கள் 9 பேர் கைது

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 9 பேர் இன்று வியாழக்கிழமை (07) அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வளத்துறைத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பா.றமேஸ் கண்ணா தெரிவித்தார்.

புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டிணத்திலிருந்து படகொன்றில் வந்து மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரிடமிருந்து மீனவர்களை பொறுப்பேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X