2025 மே 19, திங்கட்கிழமை

இன்றும் 4 மீனவர்கள் கைது

Editorial   / 2019 ஜனவரி 08 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

நெடுந்தீவு கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் நால்வரை இன்று (08) அதிகாலை காரைநகர் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 4 மீனவர்களும் காரைநகர் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.

நேற்று (07) திங்கட்கிழமை அதிகாலையும் சட்டவிரோதமாக நுழைந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 4 தமிழக மீனவர்களை காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X